1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (19:03 IST)

சுகாதார பானமாக மாறும் கோமியம்; பாஜக அரசு திட்டம்

உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
 
பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மி.லி கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளது. கோமியம் பாட்டிலில் விற்பனை தயார் செய்யப்பட்டு வருதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.