வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (16:54 IST)

பெண்ணின் மர்ம உறுப்பில் கொரொனா சோதனை; லேப் டெக்னீஷியன் கைது

உலகம் முழுவதும் 1.72 லட்சம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்15.83 லட்சம் மக்கள்  கொரொனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் தனிமுகாமில் இருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் ஒரு பாலியன் வன்முறை மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மஹாரஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் வேல செய்யும் 24 வயதான பெண் தன்னுடன் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரும் பரிசோதனை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

லேப் டெக்னீசியன் பெண்ணுக்கு மூக்கின் வழுயே சளி மாதிரிகளை எடுத்த பின் பிறப்புறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும்  என கூற அதன்படி அப்பெண்ணும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
 
பின்னர் துகுறித்து லேப் டெக்னீசினியன் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.