ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (14:57 IST)

கொரோனா பாதிப்பிலும் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏ

ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், மிசோரம்,  மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மத்தர் சட்ட மன்ற உறுப்பினர் கேசரிசிங் ஜெசங்பாய் சோலங்கி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்,இன்று மாநிலக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸில் வந்த அவர்,வாக்களித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.