தொடர்புடைய செய்திகள்
- பெங்களூரில் மீண்டும் கல்லூரி மாணவி கொலை!
- கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுப்பு! – கேரள அரசு அசத்தல் முடிவு!
- யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்!
- காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
- ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மதுரை மாணவி: இந்த ஆண்டு என்ன செய்கிறார் தெரியுமா?
19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. காதல் விவகாரமா?
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த மது சந்திரா என்பவர் கல்லூரி மாணவி ராஷி என்பவரிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறும் நிலையில் திடீரென ராஷி தனது காதலை முறித்துக் கொண்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மதுசந்தரா ராஷி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது ஒரு கட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை சரமாரியாக குத்தினார்.
இதனால் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ராஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்த மது சந்திராவை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
