வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (23:08 IST)

டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் பெற்றோர்..!

டெல்லி பல்கலைக்கழகத்தின் விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னையை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் தங்கி படித்து வந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
 
தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று அந்த மாணவி எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படிப்பு சம்பந்தமாக மாணவி கடந்த சில நாட்களாக பதட்டத்துடன் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே அவர் மன உளைச்சல் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்த மாணவி அமிர்தவர்ஷினி அதன் பிறகு சென்னைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva