1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (13:18 IST)

உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்திய தம்பதி கைது

மும்பை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். 

 
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய தம்பதி சிக்கினர். சோதனையின் போது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தம்பதியினரை தனியாக அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அதில், பெண் அவரது உள்ளடையில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி.
 
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தனது வீட்டை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வந்து இந்தியாவில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. 
 
பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அவர் தனது 2 மனைவிகளையும் மாறி மாறி தங்கத்தை கடத்த பயன்படுத்தி வந்துள்ளார்.