வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (18:48 IST)

வாட்ஸ்அப் முடக்கம்: விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு

WhatsApp
நேற்று முன்தினம் வாட்ஸ் அப் செயலி ஒரு மணி நேரத்திற்கும் மேல் முடங்கிய நிலையில் அதற்கான விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 
 
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் நேற்று முன்தினம் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தியவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்பதை விளக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர்
 
Edited by Mahendran