வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (07:26 IST)

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வழக்கறிஞர் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை பார்த்த நீதிபதி ரோகிந்தன் நரிமன், சீரியஸாகவே இந்த மனுவை விசாரிக்க வேண்டுமா? இந்த மனு மீது வாதாடப்போகிறீர்களா? என கோபத்துடன் கேட்டார். இதற்கு அந்த வழக்கறிஞர் தயக்கத்துடன் இல்லை என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
அவ்வப்போது சில குழுவினர் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என விஷமமாக பேசுவார்கள். இப்போது ஒருவர் நீதிமன்றத்திலே முறையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.