1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (20:40 IST)

டெல்லியில் காரை மறித்து துப்பாக்கி முனையில் ரூ.2 லட்சம் பணம் கொள்ளை

delhi
டெல்லியில் பட்டப்பகலில் சுரங்கப்பாதையில் ஒருவரின் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வழங்குவதற்காக இன்று வாடகை காரில் குருகிராமிற்கு சென்று கொண்டிருந்தார்.

பிரகதி மைதான சுரங்கப்பாதையில் கார் சென்று கொண்டிருக்கும்போது, அந்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த  4 பேர் கொண்ட கும்பல், காரை வழிமறித்து,  காரில் இருந்த சஜங்குமார் மற்றும் ஓட்டு நரை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது, அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.