1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:34 IST)

முதலிரவு அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை!

first night
முதலிரவு அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இதனை அடுத்து அவர் முதலிரவு அறைக்குள் மிகுந்த கனவுகளுடன் உள்ளே நுழைந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
 
இதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
உயிரிழந்த மணமகனின் பெயர் துளசி பிரசாத் என்றும் அவர் மதன பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்றும் விசாரணையில் தெரியவந்தது
 
முதலிரவு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் மணமகன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.