1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (11:29 IST)

நான் குற்றவாளி இல்லை: மல்யுத்த வீராங்கனை விவகாரம் குறித்து பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் பேட்டி!

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு பாஜக எம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் விரைவில் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நான் குற்றவாளி இல்லை என மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பேட்டி அளித்துள்ளார் 
 
மல்யுத்த வீரர்கள் தினமும் புதுப்புது கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், முதலில் என் மீது வழக்கு பதிவு கூறினார்கள், இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இப்போது என் பதவியை குறித்து என்னை சிறையில் அடைக்க போகிறார்கள், பதவி ராஜினாமா எனக்கு பெரிய விஷயம் இல்லை, ஆனால் நான் குற்றவாளி இல்லை’ என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran