1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:04 IST)

தென்மாநிலங்களில் வாஷ் அவுட், வட மாநிலங்களில் இறங்குமுகம்: பரிதாபத்தில் பாஜக

இந்தியா முழுவதும் தாமரையை மலரவைப்போம் என சூளுரைத்த பாஜகவுக்கு தற்போது அடி மேல் அடி விழுந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் எதிர்காலத்தை  நிர்ணயம் செய்யும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில் இந்த தேர்தல்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக கிட்டத்தட்ட வாஷ் அவுட் ஆகிவிட்டது. கர்நாடகத்தில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும் அது ஆட்சி அமைக்கும் வகையில் இல்லை

இந்த நிலையில் வட மாநிலங்களிலும் மோடி அலை ஓய்ந்துள்ளது என்பதையே மபி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநில தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளது. இதே ரீதியில் சென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழப்பது நிச்சயம் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.