1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bank will not work for next 4 days

முடங்கும் வங்கி சேவைகள்: தவிப்பில் வாடிக்கையாளர்கள்!

வங்கிகள் இயங்காது
வங்களின் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கு முந்தைய நாட்களான 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.
 
எனவே நாளை முதல் செவ்வாய்கிழமை வரை டெபாசிட், செக் கிளியரன்ஸ் போன்ற வங்கி ஆந்த பணிகள் நடைபெறாது. அதோடு ஏடிஎம் சேவைகளும் தடைப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தை கையில் எடுத்த அரசு!