1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Arrest RSS goons who made bombs- Sitaram Yechury

வெடிகுண்டுகள் தயாரித்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும் - சீதாராம் யெச்சூரி

Arrest RSS goons
பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்தகுற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்து அதை மசூதிகளில் வைக்க திட்டமிட்டதாக முன்னாள் சங்க உறுப்பினர்  யஷ்வந்த் ஷிண்டே உயர் நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுதிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சீதாராம் யெச்சூரி கூறியதாவது: இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ஆர்.எஸ்.எஸ் எத்தனை கொடூரமான அமைப்பு என்பது தெரிகிறது.

தேசிய நலன் பற்றிப் பேசுகின்ற' 56 இன்ச் அரசு' என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்தக் குற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  
 
அடுத்த கட்டுரையில்
ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை – முதல்வர் ஸ்டாலின்