1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (08:24 IST)

மாணவர்களுக்கு உணவாக மாட்டு தீவனம்... அந்நியாயம் பண்ணும் மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனாவை முன்னிட்டு மகாராஷ்டிர அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்காக பள்ளிக்கு மதிய உணவு அனுப்பி வைக்கப்பட்டு அதை மாணவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதன் படி புனேவில் இயங்கி வரும் அரசு பள்ளியில் மாணவ்ர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.