1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Andhra bus accident 5 people died

அரை தூக்கத்தில் பேருந்து ஓட்டிய டிரைவர்! – விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் பலி!

accident
ஒடிசாவில் இருந்து ஆந்திரா சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவிற்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்து அதிகாலை அல்லூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு