1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஜூலை 2023 (19:06 IST)

வெள்ளத்தில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள எருது மீட்பு!

ox
டெல்லியில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.1 கோடி மதிப்பிலான எருது மீட்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை  பெய்து வரும் நிலையில் ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அபாள அளவைத் தாண்டி   நீர்மட்டும் உயர்ந்து காணப்படுகிறது.  இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 550 ஹெக்டேர் வரை  நீரில் மூழ்கியுள்ளது. இதில் பல விலங்குகளும்  மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  2 எருமைகள் மற்றும் ஒரு விலைமதிப்புள்ள ஒரு எருதுவை தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  மீட்டுள்ளனர்.

இதன்மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.