வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (08:48 IST)

உயிர்நீத்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: அமிதாப் அறிவிப்பு

நாட்டுக்காக உயிர்நீதித்த சிஆர்பிஎப் வீரர்களின் குடுமபங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்  தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட  சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர் இந்த கொடூர தாக்குதலுக்கு பாலிவுட் திரை உலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன், இந்த பயங்கரவாத செயலை கடுமையாக கண்டித்துள்ளார். நாட்டுக்காக உயிர்நீதித்த சிஆர்பிஎப் வீரர்களின் குடுமபங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.