1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (11:10 IST)

ஆம்புலன்ஸை நிறுத்தி, கொரோனா நோயாளியுடன் உல்லாசம் கொண்ட ஓட்டுநர்!

கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலாத்காரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
 
ஏற்பாட்டின் படி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். 
 
இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தார். அந்த பெண் நடந்ததை தனது சிகிச்சை கொடுக்க வந்த மருத்துவரிடம் இதைப்பற்றி கூற இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.