1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (15:21 IST)

மீண்டும் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் முடிவு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Airtel
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஏர்டெல், ஜியோ உள்பட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் தற்போது ஏர்டெல் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது 
இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது பிரிபெய்டு கட்டணத்தையும் உயர்த்த உள்ளதாக ஏர்டெல் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது