1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (09:00 IST)

கேரளாவில் பன்றிகள் அழிக்கும் பணி தீவிரம்!

கேரளாவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டு 300 பன்றிகள் அழிக்கப்படும் என அறிவிப்பு.


கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்ணை ஒன்றில் பன்றிகள் மொத்தமாக இறந்ததை அடுத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.இப்போது பரிசோதனை முடிவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரி கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கியது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும்.