1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (21:51 IST)

கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்

நம் நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் உற்சாகத்துடன்  நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பை தேர்தல் கருவி மூலம் எழுதிவருகின்றனர். வரும் மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் பாஜக சார்பில் அங்கு வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
 
காம்பீர் டெல்லியில் உள்ள கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
 
மேலும் பாஜக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென திட்டம் தீட்டிவருகிறது. இந்நிலையில் மக்களிடம் பிரபலமான காம்பீரை அதில் ஓரு வேட்பாளராக பாஜக தேர்தலில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.