1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (14:09 IST)

சமாதானம் பேசும் முயற்சியில் பலியான தம்பதி

south railway
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம்  மாநிலத்தில்  முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு வாரணாசியைச் சேர்ந்த குஷ்பு ,கோவிந்த் என்ற தம்பதியர் வசித்து வந்தனர்.

கோவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால், தினமும் குடித்துவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த கணவர் மீது கோபம் கொண்டு ரயில் தண்டவாளம் நோக்கிச் சென்றார்., அப்போது, அவரை சமாதானப்படுத்த கோவிந்த் அங்கு சென்றார்.

மனைவியை கட்டியணைத்து சமாதானப்படுத்த முயன்றபோது, ரயில் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகிறது.