வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (18:48 IST)

அசாமில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பரிதாப பலி

அசாம் மாநிலத்தின்  தலைநகரான கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து ஓன்று நல்பாரி மாவட்டத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே  7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
அசாம் மாநில அரசு பேருந்தில்  சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பார்பேட்டா நகரை நோக்கி பயணம் செய்தனர். மாலை 3.30 மணியளவில் நல்பாரி என்ற மாவட்டத்தின் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது , அடபாரி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த ஒரு குட்டைக்குள் பாய்ந்தது.
 
அந்த பேருந்தில் பயணம் செய்த  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்பதற்காக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
 
இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.