செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (17:53 IST)

வயிற்றுக்குள் காற்றை நிரப்பிய சிறுவன்: மரணமடைந்த துயர சம்பவம்..

மத்திய பிரதேசத்தில், காற்றடிக்கும் பம்பு கொண்டு வயிற்றில் காற்றடித்த சிறுவன் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், நேற்று விடுமுறை என்பதால், சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த காற்று பம்பு ஒன்றை எடுத்து வந்து விளையாடினர். அப்போது அந்த சிறுவனும் விளையாட்டுப் போக்கில், தனது வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியுள்ளான்.

பின்னர் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போது, சிறுவனின் வயிறு வீங்கியுள்ளது. மூச்சு விடவும் திணறியுள்ளான். சிறுவனை விசாரித்த பெற்றோருக்கு, வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியது தெரியவந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சிறுவனின் தந்தையை விசாரித்தனர். அதன் பின்பு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடிய சிறுவன், வயிறு வீங்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.