1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (21:54 IST)

3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: அமைதி காக்கும் ஊடகங்கள்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் 3 வயது டிவிங்கில் ஷர்மா என்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதுமட்டுமின்றி அந்த சிறுமியை சித்ரவதை செய்து கண்களை தோண்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலையும் செய்து உள்ளான்.
 
இந்த படுபாதக செயலை செய்தவன் முகமது ஜாஹித் என்று தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும் ஜாஹித்தும் ஏற்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் தகறாருக்காக சிறுமியை பழிதீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தமிழக ஊடகங்கள் உள்பட எந்த ஒரு பெரிய ஊடகங்களும் இதுகுறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை. பெண் உரிமை பேசும் எந்த ஒரு சினிமா பிரபலங்களும் இதுகுறித்து வாயைத்திறக்கவில்லை. ஏன் என்ற காரணம் குறித்து இங்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த செய்தியை கூர்ந்து படித்தால் காரணம் தெரிய வரும்