1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:54 IST)

சிறுமிக்கு 9 வருடங்கள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 97 ஆண்டு சிறை..!

ஒன்பது ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நபருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கேரளாவில்  உறவுக்கார சிறுமியை 9 ஆண்டுகளாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது. 
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் குற்றவாளிக்கு தொகுத்து 97 வருட சிறை தண்டனையும் 8 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
காசர்கோடு மாவட்ட நீதிமன்றம் அளித்த இந்த அதிரடி தீர்ப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva