1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (18:01 IST)

மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டு சிறை - மத்திய அரசு

இந்தியாவில் சமீக காலங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர், கர்ப்பிணி, போன்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தால்  அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பர். சில சமயம் நோயாளிகள் இறக்க நேரிடும். அப்போதுஉரிய சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறி உறவினர்கள் மருத்துவரைத் தாக்குவதும், அடித்து உதைப்பதுமான சம்பவங்கள் அரங்கேறியது.

இதற்கெதியாகவும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனன் இந்தியா முழுவதிலுமுள்ள மருத்துவர்கள்ன் போராடினர்.

இந்நிலையில் தற்போது பார்லி கூட்டத் தொடர் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர்கள், செவிலியர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை  என்று மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தண்டனையில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி சட்டத்திருத்தம் செய்து நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.