1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (16:26 IST)

12 வயது மகளை ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோர்: சிறுமியை திருமணம் செய்த மணமகன் கைது..!

marriage
12 வயது சிறுமியை 40 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 27 வயது இளைஞனுக்கு விற்று விட்டதாகவும் இதனை அடுத்து அந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் சிறுமியை விற்ற பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமிக்கு 27 வயது இளைஞரை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இளைஞரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறுமியின் பெற்றோர் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து சிறுமியின் பெற்றோர் மணமகன் மற்றும் மணமகனின் பெற்றோர் என ஐந்து பேரை கைது செய்தனர். இது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva