1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:05 IST)

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை

kerala
கேரளம் மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில்  நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், இருவழக்குகளிலும் முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 204 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26  மாதங்கள் சிறை என்று என்று உத்தரவிட்டுள்ளது.