1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (12:43 IST)

மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டம்: 10 பேர் கைது

உத்தரப்பிரேதசத்தில் ஐபிஎல் போட்டிகளை வைத்து மீண்டும் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
இந்தியாவில் 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து உத்திரப்பிரதேச மாநிலம் நந்தகிராமில் சூதாட்டம் நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கவுன்சிலர் அலுவலக்த்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரொக்கம், ஒரு லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஏற்கனவே உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைதான நிலையில், மீண்டும் இது போன்ற சம்பவம் அங்கு நிகழ்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.