திடீரென 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

புதன், 4 ஜனவரி 2023 (10:02 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக புத்தாண்டுக்கு பின்னர் இரண்டு நாட்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 910 என வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் சென்சாக்ஸ் 61 ஆயிரத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்து 18120 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் பங்குச் சந்தை சரிந்தாலும் மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

10 மணிக்கெல்லாம் தலைமை செயலகம்.. மதிய சாப்பாடும் இங்கே தான்.. இப்படி ஒரு முதல்வரா? ஆச்சரியத்தில் ஊழியர்கள்..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தார்மீகப் பொறுப்பேற்கிறேன்: கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்கள்.. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை..!

பெண்களுக்கு மாசம் ரூ.2500.. வேலையை துவங்கிய முதல்வர் விஜய்!..

ஸ்கெட்ச் மிஸ் ஆயிடுச்சி!.. அடுத்த ஸ்கெட்ச் சேப்பாக்கம்தான்!.. ஆதவ் அர்ஜுனா ராக்ஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments