வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:45 IST)

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - தினகரன்

அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா அலுவலம் அருகே திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் வருகிறது.  இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் தோல்வியடைந்தால் கட்டாயம் இந்த அரசு வீட்டிற்குச்  சென்று விடும். மேலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவித்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.