வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (10:58 IST)

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலை

நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சுமார் 200949 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுனீர் சுமார் 78728 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.