1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (21:03 IST)

Tik Tok இடத்தைப் பிடிக்கப் போட்டி போடும் Face Book -ன் இன்ஸ்டா

சமீபத்தில் இந்திய சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனையடுத்து,  சீனா தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டாம என நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

பின்னர், மத்திய அரசு சீனா நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் டிக் டாக், ஷேர், ஹலோ ஆப்களும் அடக்கம்.

இதனையடுத்து, டிக்டாக்,  ஹலோ  ஆப்களின் சார்பில் மத்திய அரசிடம் மீண்டும் தங்கள் ஆப்கள் இயங்க அனுமதி கேட்டு வருகின்றனர். ஏனென்றால் இதில் பல கோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்.  டிக் டாக் ஆப்களின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என பல இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போட்டி போடு வருகின்றனர்.

அதில்,  சிங்கார் ஆப்களும் ஏராளமான வாடிக்கையாளர்களைப்  பெற்றுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் தஙகளது இன்ஸ்டா மூலம்  டிக் டாக் இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏனென்றால் இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனர். இதில் டிக் டாக் 20 பயனாளர்களைப் பிடித்திருந்ததால் தற்போது 20 கோடி பயனாளர்களைப் பிடிப்பதில் பேஸ்புக் குறியாக உள்ளது.

இந்நிலையில் அணையில் மத்திய அரசு பாதுக்காப்பு நலன் கருதி Face Book, Tik Tok, Ture Caller, Instagram உள்ளிட்ட 89 செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவற்றை செல்போனில் வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடுமாறு இந்திய ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ராணுவ வட்டாராங்கள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.