வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj kiyan
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (21:13 IST)

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட என்ன செய்யவேண்டும்...?

வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும். எந்த விஷயத்திலும் எளிதில் முடிவு எடுக்க முடியாது.  வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல் கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தொழ்ஹில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகல் வீட்டில் நடக்காமல் தள்ளிப்  போவது, வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது, ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது, பிள்ளைகளின்  படிப்பில் மந்த நிலை பொன்ற அனைத்திற்கு வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் காரணமாக இருக்கும்.
 
இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். 
 
கல் உப்பை கொண்டு பரிகாரம் செய்வதற்கு, கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1, கண்ணாடி கோப்பை 1, இந்த  பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும்.
 
இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒரு  கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த  மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும்.
 
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின்  மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும்.
 
அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை  சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.