தொடர்புடைய செய்திகள்
- நாகர்கோவில் டூ பொள்ளாச்சி… காமெடி த்ரில்லர் பயணம் –வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் படத்தின் கதைக்களம்!
- அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைப்பு! - அழைப்பிதழை பெற்று கொண்ட ரஜினிகாந்த்!
- உண்மையான ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பு.. ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர்.!
- இஸ்லாமியர்களும் 'ஜெய் ஸ்ரீ ராம் ' சொல்ல வேண்டும்- ஆர்,எஸ்.எஸ் உறுப்பினர் சர்ச்சை பேச்சு
- ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம்- கின்னஸ் சாதனைக்கு பிரதமர் பாராட்டு
தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் பெருமாள் கோவில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?
பொதுவாக வைகுண்ட ஏகாதேசி தினத்தில் மட்டும் தான் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் தினமும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதும் இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும் சொர்க்கவாசலை பயன்படுத்தி வெளியே வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக தான் இந்த தலத்திற்கு நித்திய சொர்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயர் உண்டு. இந்த தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பார்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினங்களில் இங்கே பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
