Daily Horoscope

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: நாளை சிறப்பாக தொடங்குகிறது

Written By Siva
Updated: வியாழன், 22 டிசம்பர் 2022 (21:52 IST)
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிந்தே. இந்த நிலையில் இன்று இரவு தொடங்கும் இந்த விழா நாளை முதல் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் வந்து அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு தேதி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

அடுத்த கட்டுரையில்
Show comments