1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Sakopuram street walk in Vaideeswaran temple..!

வைத்தீஸ்வரன் கோவிலில் சகோபுரம் வீதி உலா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

temple
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சகோபுரம் வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்  தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல் நாயகி சுவாமி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இக்கோயில் செவ்வாய்  தளமாகவும் விளங்குகிறது. தைச்செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசுவாமி சகோபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருள மகா தீபாரதனை காட்டப்பட்டது. 
 
samy
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சகோபுரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானை தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சாமிகள் வடம் பிடித்து  இழுத்தார். அவரைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் சகோபுத்தை வடம் பிடித்து நான்கு மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.


வீதி உலாவையொட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு நிலம், தனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்! – இன்றைய ராசி பலன்கள்(02.02.2024)!