தொடர்புடைய செய்திகள்
- சபரிமலை அரவணை பாயாசத்தில் இந்த பொருட்கள் சேர்க்கப்படாது! – தேவசம்போர்டு அதிரடி முடிவு!
- மணக்கோலத்தில் காட்சி தரும் சுவாமி ஐயப்பன்! திருமண பாக்கியம் தரும் ‘ஆரியங்காவு’ ஐயப்பன்!
- ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை – என்ன படம்னு தெரியுமா?
- சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரி - மகாராஷ்டிரா சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
- சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை செய்ய 15 ஆண்டுகளுக்கு அதாவது 2038 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது என்று தகவல் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக படி பூஜை செய்வதற்கான முன்பதிவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் படி பூஜை செய்ய ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 என்று கட்டணம் வசூலித்து வரும் நிலையில் இந்த படி பூஜைக்காக 2038 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் இந்த பூஜைக்கு ரூபாய் 61,800 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
