தொடர்புடைய செய்திகள்
- குன்றத்தூர் முருகன் கோவிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம்: பக்தர்கள் மகிழ்ச்சி..!
- புரட்டாசி விரதத்தால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்! – கிலோமீட்டர் கணக்கில் க்யூ!
- இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை! பக்தர்கள் அதிருப்தி..!
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- திருமலை கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணன் கோவில் இருப்பதால் ‘கிருஷ்ணன் கோவில்’ என்று பெயர் பெற்ற ஊர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கிருஷ்ணன் கோயில் இருப்பதால் அந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என பெயர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்கு அழகான கிருஷ்ணன் கோயில் இருப்பதால்தான் இந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இங்குள்ள மூலவர் பாலகிருஷ்ணன் என்ற குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார் என்பதும் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் உள்ள பாலகிருஷ்ணனை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் விலகும் என்றும் அவர் பக்தர்களுக்கு வாரி வாரி வரங்களை வழங்குவார் என்றும் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் வெள்ளி தொட்டிலில் பாலகிருஷ்ணனை படுக்க வைத்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் நிகழ்வும் இந்த கோவிலில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
