ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:54 IST)

இல்லத்தில் திருமகள் குடியேற சில வழிமுறைகள்

ஆன்மீகத்தில் சில நம்பிக்கைகள் பின்பற்றபடுவதால் இனிய வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.
 
1.  நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.
 
2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல்.
 
3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல்.
 
4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல்.
 
5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.
 
6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.
 
7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.
 
8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.
 
9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
 
10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.
 
இவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும்.
 
இவைகளை கடைபிடித்தால், அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை வழங்குவார்கள்