தொடர்புடைய செய்திகள்
- இசைவாணி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு..!
- ஐயப்ப விரதம் மேற்கொள்பவர்கள் அனுதினம் சொல்ல வேண்டிய மந்திரம்! Ayyappa Mandhiram
- பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!
- ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?
- சபரிமலை யாத்திரை சென்ற பக்தர் திடீர் உயிரிழப்பு! - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த தேவசம்போர்டு!
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் வழிபாடு முறைகள் மிகவும் தனித்துவமானவை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, கடுமையான விரதங்களை கடைப்பிடித்து இக்கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
தற்போது ஐயப்ப விரத முறைகள் குறித்து பார்ப்போம்.
விரதம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் 48 நாட்கள் கடுமையான விரதத்தில் இருக்க வேண்டும்.
ஆடை தரிப்பு: கருப்பு, காவி அல்லது நீலம் நிறத்திலான வேஷ்டி, சட்டை அணிய வேண்டும்.
மாலையணித்தல்: கார்த்திகை மாதத்தின் முதல் நாளில், பெற்றோரின் ஆசி பெற்று, குருசாமியின் வழிகாட்டுதலுடன் மாலை அணிய வேண்டும்.
தினசரி பூஜை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, 108 முறை "ஐயப்பன் சரணம்" கூறி பூஜை செய்ய வேண்டும். மாலையில் சூரியன் மறைந்த பின்பு மீண்டும் அதே விதமாக பூஜை செய்ய வேண்டும்.
விரதமிருப்பவர்கள் என்ன செய்யக்கூடாது:
குளிக்கும் போது சோப்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
மெத்தை, தலையணை போன்றவற்றில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்; தரையில் மட்டுமே படுக்க வேண்டும்.
மாமிச உணவுகள், மது, சிகரெட், புகையிலை போன்றவை கூடாது.
திரைப்படங்கள், சூதாட்டம், காலணிகள் மற்றும் குடை போன்றவற்றை விரத காலத்தில் தவிர்க்க வேண்டும்.
பொதுவான வழிமுறைகள்:
பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடித்து, பெண்களை தாயின் உருவமாகக் கருத வேண்டும்.
பக்தர்கள் ஒருவரை ஒருவர் "சுவாமி சரணம்" என்று அன்புடன் வரவேற்க வேண்டும்.
விரத காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகள்:
சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
உணவை வாழை இலையில் சாப்பிடுவது சிறந்தது. உணவிற்கு முன்பு "சரணம் ஐயப்பா" கூறி உண்பது வழக்கம்.
மன அமைதி மற்றும் சாந்தம்:
கோபம், சண்டை, வெறுப்பு ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
மனதில் எப்போதும் ஐயப்பனை நினைத்து, பக்தி பாடல்களை பாடி மனச்சாந்தியுடன் இருக்க வேண்டும்.
Edited by Mahendran
