தொடர்புடைய செய்திகள்
- அமா்நாத் யாத்திரை நிறைவு: இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை...!
- திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு எச்சரிக்கை..!
- நேற்று கொடுத்த அனுமதி இன்று ரத்து! சதுரகிரிக்கு செல்ல தடை! - பக்தர்கள் அதிர்ச்சி!
- ஆவணி மாத பூஜைக்காக இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு: குவியும் பக்தர்கள்..!
- இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா.. குவிந்த பக்தர்கள்
கடவுளுக்கு போட்ட மாலைகளை பக்தர்களுக்கு போடுவது சரியா?
கடவுள் சிலைகளுக்கு போட்ட மாலையை எடுத்து பூசாரிகள் பக்தர்களுக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இது சரியா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.
இதற்கு ஆன்மீகவாதிகள் பதில் அளித்தபோது பக்தர்கள் அனைவரும் கொடுக்கும் மாலைகளை கடவுள் சிலைக்கு போடும்போது அந்த மாலை புனித தன்மை பெறுகிறது என்றும் தெய்வ சக்தியும் அந்த மாலைகளுக்கு கிடைக்கிறது என்றும் அந்த மாலையை பக்தர்களுக்கு அணிவதால் பக்தர்கள் திருப்தி அடைவார்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அனைத்து மாலைகளையும் கடவுள் சிலையில் இருந்தால் எண்ணிக்கை அதிகம் ஆகிவிடும் என்றும் அவ்வப்போது அந்த மாலைகளை எடுத்து பக்தர்களுக்கு கொடுப்பதால் பக்தரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
எனவே கடவுளுக்கு சாத்திய மாலையை பக்தர்களுக்கு அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை மாறாக பக்தர்களுக்கு அது தெய்வ அருள் கிடைத்த நம்பிக்கை கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர் .
Edited by Mahendran
