வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்ற உதவும் குறிப்புகள் !!

புதினா இலைகள் சிறந்த டோனராக செயல்படும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றவும் உதவும்.

கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர  வைத்து பின் கழுவ வேண்டும்.  
 
புதினா இலைகளை கொதிக்க வைத்த நீரில் போட்டு, குளிர வைத்து, பின் அந்த நீரால் முகத்தைத் துடைத்து எடுத்த பின், மீண்டும் அந்த நீரால் முகத்தைக் கழுவ  வேண்டும்.
 
கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். 
 
பப்பாளிப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும், பிறகு நீரில் கழுவி விடவும். இவ்வாறு செய்யும் பொது சருமத்தில் உள்ள துளைகள் ஆழமாக சுத்தமாக்கும், இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
 
அரை கப் தயிர், சிறிதளவு மஞ்சள் தூள் , அரை ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர எண்ணெய் பசை நீங்கி முகம் ப்ளீச்சிங் செய்தது போல் தோற்றமளிக்கும்.
 
முல்தானி மெட்டி சருமத்திற்கு சிறந்த மூலிகையாகும். முல்தானி மெட்டி பவுடரை சிறிது தண்ணீர் சேர்த்து குழப்பி முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர சருமம் பளபளப்பாகும்.
 
சந்தனம் சருமத்திற்கு சந்தனம் மிகச் சிறந்த பொருள். உடல் வெப்பத்தை குறைக்க கூடியது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்ச்சி தரும்.