தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்காதலுடன் சேர்ந்து 3 வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது!
- குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா
- தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!
- மருத்துவம், பொறியியல் படிப்புகள் தாய்மொழியில் கற்பிக்கப்படும்: முதலமைச்சர் தகவல்
- தாம்பத்ய ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளை குளிப்பாட்டும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
குழந்தைகளை குளிப்பாட்டும் போது அதுவும் குளிர் காலத்தில் குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்
பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம்.
குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்
அதே போல் குளிர்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
