1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:03 IST)

மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்கு சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை 175 புள்ளிகள் உயர்ந்து 67 ஆயிரத்து 692 புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 20159 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால், அடுத்த வாரம் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva