செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:20 IST)

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி – சையத் அலி கோப்பை நிறைவு!

நடந்து வந்த சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று இப்போது விறுவிறுப்பானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த முறையும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இறுதி போட்டியில் பரோடா அணியுடன் மோதிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.