1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:32 IST)

கோலிக்கு ஆதரவாக ஆர்சிபி பகிர்ந்த டிவீட்!

இந்திய அணியின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.

ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் ‘கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார்’ என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கோலியை அவமானப்படுத்தும் விதமாக பிசிசிஐ நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கோலி ஆடும் அணியான ஆர் சி பி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தலைவன். போர்வீரன். ஒரே ஒரு கிங் கோலிதான் இருக்க முடியும். உங்களுடைய கிரிக்கெட் அனுகுமுறையைதான் எதிர்காலம் பின்பற்ற போகிறது’ எனக் கூறியுள்ளது.