கப்பு முக்கியம் பிகிலு..! சூதானமாய் தயாராகும் ராயல் சேலஞ்சர்ஸ்! – ஹைதராபாத்தை வீழ்த்துமா?

திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:48 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் அதிகம் சொதப்பிய அணியாக கிண்டலுக்கு உள்ளாகி வரும் ஆர்சிபி இந்த முறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தலைமை வகிக்கும் அணியாக இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடந்த மூன்று சீசன்களாக அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாத அளவில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வழங்கி வருகிறது. இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் மிகவும் தீவிரமாக உள்ளது.

ஐபிஎல் ஏலத்தின் போதே ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று சன் ரைஸர்ஸுடன் முதலாவது ஆட்டத்தை தொடங்க உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ். முன்னதாக 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இந்த அணிகளில் ஆர்சிபி 6 முறையும், சன் ரைஸர்ஸ் 8 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் ட்ரா ஆனது.

இந்த முறை தொடக்கத்திலேயே வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கி ஆர்சிபி சர்ப்ரைஸ் கொடுக்கும் என அதன் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments